"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Friday, December 25, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து!

அன்னையே! அருந்தமிழே! அகமிருந்து காருமம்மா!
அறிவின் சுடரேற்றி ஆத்மபலம் தாருமம்மா!
இம்மையிலும் மறுமையிலும் இனிதிருக்கும் நற்றமிழே!
ஈடுஇணை இல்லாமல் ஈட்டுபுகழ் கொண்டவளே!
உள்ளத்துள் ஒளிர்ந்திடுவாய்! உலகமெங்கும் நிறைந்திடுவாய்!
ஊக்கம் கொடுத்தேயெம்மை ஊரறிய செய்திடுவாய்!
எழுகடல் ஆழம் உனது! எல்லியின் தன்மை உனது!
ஏற்றம் தருந்தமிழே! வையம் ஏற்றதோர் பொன்மொழியே!
ஐயம் திரிபறக் கற்றிடவே ஐக்கியமானோம் உன்மடியில்!
ஒன்றிடச் செய்திடுவாய்! ஒல்காப் புகழ்ச் சேர்த்திடுவாய்!
ஓதும் மறை நீயெனக்கு! ஓங்கு புகழ் நாவினிற்கு!
ஒளடதமாய் நீயிருக்க அகம் குளிரும்! ஒளவை தந்த நூலெலாம் அறம் வளர்க்கும்!
அன்பும் அமைதியுமென் தன்மை! அறிவும் செறிவும் நம்முடைமை!
சொன்ன சொற்கள் எனக்குத் தலைமை கொள்ளும்!
சொல்லாத சொற்களுக்கு நாம் தலைமை கொள்வோம்!
செந்தமிழாய்,நறுந்தேனாய் செழித்திருக்கும் செழுந்தமிழே!
செந்நாவில் வீற்றிருந்து எந்நாளும் வாழிய நீ!
வந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்று
பைந்தமிழே! எந்நாளும் பாங்குடன் நீ வாழியவே!

No comments:

Post a Comment