"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Wednesday, July 10, 2013

மழை


கார்முகிலே கார்முகிலே என்ன சத்தம்?
   வானம் வந்து நிலமகளுக்கு இட்ட முத்தம்!
தேன் துளியாய் தேன் துளியாய் மழையின் சத்தம்,
   கானமெனக் கேட்குதையா நித்தம் நித்தம்!
நிலமகளின் உயிர்ப்பெனவே இயற்கை மொத்தம்,
   அழுக்கு நீக்கிக் குளிக்குது பார் என்ன வெட்கம்!
மழை வெயிலும் பிரதிபலிக்கும் மண்ணின் பக்கம்,
   விளையுது பார் வானவில்லின் வண்ணம் மொத்தம்!
கலையெனவே மிளிருமிந்த காட்சி சுத்தம்,
   கண்டிடவே விரும்புதம்மா மனசு நித்தம்!!