"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, March 22, 2009

மைதிலி ! என் தோழி


திறமை என்ற மூன்றெழுத்தில்
ஈற்றெழுத்தை முதலெழுத்தாக்கி
முதலெழுத்தைத் தொடரெழுத்தாக்கி
இடையின லகரமொடு இகரம் சேர்த்து
இறுதியிலிட்டால் அவள் பெயர் !

குணமோ தங்கம் ! மனமோ வைரம் !
கவிபாடும் குயில் ! இருகரம் பெற்ற மயில் !
இவள் சிந்துவதோ கிள்ளை மொழி
உள்ளமோ வெள்ளை வழி
இவள் இயல்பினைக் கண்ட அன்னம்
இவளே சிறந்தாளென எண்ணும் !

நூலறிவும், நுவலறிவும்
நுகர்ந்ததனால் நுவலுகின்றேன்
அகவையோ சிறிது ! ஆயின்
அவளறிவோ பெரிது!
தமிழ் கூறும் நல்லுலகில்
தன் பதிப்பை நிதம் பதிக்க
ஆதவன் போலவே வளர
ஒளி விளங்க - அகம் குளிர்ந்து
அடியேனும் வாழ்த்துகின்றேன் !

எவ்விடத்தும் எந்நிலையிலும்
உளம் நிறைந்த
உள்ளார்ந்த அன்பினையே – பரிசாய்
உவந்தளிப்பேன் ! யானும் பெற்றிடுவேன் !
விழைவிருந்தால் அன்பு
விண்ணையும் தாண்டி விளங்கட்டுமே !

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

வார்த்தை சாலங்களுடன் கலக்கல் கவிதை

mohanasundaram said...

அடேங்கப்பா...
அசத்தல் ஐயா.
வாழ்க.. வாழ்க...

Post a Comment