"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Friday, March 20, 2009

“ இன்னும் ஒரு நாள்”

சில்லென்ற இதழெடுத்து மெல்லிய உடலெங்கும்
உச்சிமுதல் பாதம்வரை ஒத்தடம் இட்டுச்சென்றது
மெல்லிய பூங்காற்று !
உடலுக்குள் புத்துணர்வு ; உயிருக்குள் புத்துயிர்ப்பு :
நிலமகளும் மன மகிழ நிலவோடு கதிருதிக்க
புள்ளினம் சிறகசைக்க பூவினம் இதழ் விரிக்க
தென்றலோ மணம்பரப்ப அன்றிலென மனம் ஒன்ற
சுத்தமான காற்று, சத்தமற்ற சூழல்
பறவைகளின் பாடல், ஒளியுடன் இருள் ஊடல்
தெளிவுடன் ஒரு தேடல் !
புல்லின் நுனியிலும் மெல்லிய மணிமகுடம் சூட
வந்ததே விடியல் !
வந்தே தந்ததே இயற்கையின் மடியில்
இன்னும் ஒரு நாள் !

No comments:

Post a Comment