"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, February 20, 2011

மரம்

Trees

ஆயிரமாயிரம் கால்களைக் கொண்டு மண்ணைப் பிடிக்கின்றாய்!

ஆயிரமாயிரம் கைகளைக் கொண்டு விண்ணை யளக்கின்றாய்!

விண்ணிற்கும் மண்ணிற்கும் பாலமாக நிற்கின்றாய்!

எண்ணற்ற எண்ணங்களை என்னுள் நீ தருகின்றாய்!

மண்ணில் விழுந்திட்ட விதையினின்று எழுந்து வந்தனை நீ!

என்னுள் எழுந்திட்ட கவிதையினை வளர்த்துத் தந்தனை நீ!

இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த முதல் குழந்தையும் நீ!

செயற்கையின் பிடியில் மடியாமல் காக்கும் அன்பு விந்தையும் நீ!

வாழ்க்கைத் தத்துவம் யாவும் உன்னுள் அடக்கம்!

உன்னைப் போல் வாழ்ந்தால் எவருக்கும் வாழ்க்கைப் பிடிக்கும்!

No comments:

Post a Comment