"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Tuesday, March 17, 2009

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்………”


அணுவாய்ப் பிறந்தோம் ; பலவாய்ப் பிரிந்தோம் ;
அண்டம் பலவும் அளந்தோம், கடந்தோம் ;
பல்லுயிராய்ப் பிறந்தோம் , பரிணாமம் அடைந்தோம் ;
தொல்லுலகம் முழுதும் தொடர்ந்தோம், தொடர்ந்தோம் !

இனிதாய் பல பிறவி எடுத்தும், முடித்தும்
இன்னுமோர் பிறவியை எய்துவதும் ஏனோ?
கனிவாய் நிறைவினைக் கண்ட பின்பு
முனிவினை நீங்கி முதல் நிலை பெறவே
துணிவுடன் செய்வோம் நல்வினைத் தொடர
பணிவுடன் பணிவோம் பதந்தனைத் தானே !!

1 comment:

mohanasundaram said...

எனக்கினிப்பிறவி வேண்டாம்.

Post a Comment