"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Thursday, January 14, 2010

நன்றியறிதல்

ஆடிப்பட்டம் தேடி விதைத்து
அயராது உழைத்து வியர்வை சிந்தியவருக்கு
அறுவடைக் காலம் இப்பொன்னாள்!
தை மகளே! திருமகளே!
வளங்கொழிக்கும் வரமருளே!
தித்திக்கும் இப்பொங்கல் திருநாளில்
எத்திக்கும் உள்ள தமிழர்களுக்கு
முத்தான பொங்கல் நல்வாழ்த்துகள்!

உணவு தந்த உழவருக்கு
உணவு கிடைக்கச் செய்வோம்!
உலகமெங்கும் உணவு நிறைவாய்ப் பெற
உழவுத் தொழில் செய்வோம்!
பணமல்ல நமது நோக்கு! – இது பாரதம்!
பசிப்பிணியை நீ போக்கு! –
அகிலத்திற்கே அன்னமிடும் அட்சயப்பாத்திரம் நமது பூமி!
அயராது உழைத்து அன்பினைக்கூட்டு - அகிலத்திற்கே நீ சாமி!

தைமகளே! திருமகளே!
உழைத்தவனுக்கு சன்மானம் வழங்குவாய்!
உயிர்களுக்கு உணவினை வழங்குவாய்!
பாடுபட்டுப் பெற்ற பயனுக்கும்
பாமரன் நன்றி சொல்கிறான்!
பாடறிந்து ஒழுகல் நம் பண்பாடு!
பண்புடன் நன்றியறிதலை நாம் உணர்வோமாக!
அன்புடன் பொங்கல் நல்வாழ்த்துகள்!

4 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள்

முருக.கவி said...

நன்றி நண்பரே!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

வாழ்த்துக்கள்!!

Post a Comment